கண் சிப்பி


செடார் மரத்தின்
உச்சிக் கிளையினின்று
தேவ தூது தாங்கி வரும்
ஒற்றை மழைத் துளி
இறங்கி
இறங்கி
இறங்கி நெருங்கி
நோக்கி நின்ற விழியில் விழுந்து
கண் இமைத்த ஒரு கணம்
எல்லாமே
தெரிந்து மறைந்தது .

- மதி

(புகைப்படம்: நண்பர் விஷ்ணு)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..