கா.. கா.... காதல்



நடு இரவில்
மொட்டை மாடியில்
வானம் பார்த்து
மல்லாந்து கிடந்தேன்.
காகங்கள் கூட்டம் ஒன்று
அவள் வீட்டு வழிதான் போகிறோம்
ஏதும் சேதி உண்டா
என்றது.
நான் சிரித்துக்கொண்டே
என் காதலி
கொஞ்சம் தத்தி
அவளுக்கு
காக்கை பாஷையும் தெரியாது
இப்போதைக்கு
என் காதல் பாஷையும் புரியாது
நீங்கள் போங்கள்
தேவைப்பட்டால் சொல்கிறேன்
என்று அனுப்பிவிட்டேன்.
காதலி !
நீ முதலில்
எந்த பாஷையைக்
கற்றுக்கொள்ளப் போகிறாய் ?

- மதி

(கவிதாட்சரம் ஜனவரி 25 வரை)

கருத்துகள்

  1. நல்ல கற்பனை.தலைப்பு மிகப் பொருத்தம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 26, 2011

    இப்போதைக்கு
    என் காதல் பாஷையும் புரியாது

    Sila velaikalil purinthum puriyaamal silar iruppar!Thangalin ithaya rambai epdiyo?

    பதிலளிநீக்கு
  3. it reminds the line.."kadhalukku annapachi theyvaillayeh...kakkai kuda thoodhu pogumey..!!!

    பதிலளிநீக்கு
  4. thanx all :-) @sangeetha even i notice the same thought after your comment

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..