கண்ணே உன் கண்ணிடம் ஒரு வேண்டுகோள்


உன் விழியும்
என் விழியும்
சந்தித்துக் கொள்ளும்
ஒரே ஒரு நொடியில்
எத்தனை அர்த்தங்களைக் காட்டுகிறாய்
எத்தனை ஆழங்களைக் கிளறுகிறாய்
அடி அறிவாளிக் காதலி !
ஒன்று
உன் விழிகளை
அதிக நேரம் பார்க்கச் சொல்.
இல்லை
குறைவாகக் குழப்பச் சொல் !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..