சாசுவதம்


ஆதி முதல் துளி
கீழிறங்கி வருகையில்
அமிர்தமா
அமிலமா என்றறிய
கை நீட்டினோம் .
பின் குகை செய்தோம்
உடை செய்தோம்
குடை செய்தோம்
நம்
விரல்களுக்கு மட்டும்
சளி பிடிப்பதில்லை என்று
கண்டுகொண்டோம்.
மழை பொழிகிறது
நம் பிள்ளைகள்
உள்ளங்கையில் மழை பிடிக்கின்றனர் .

கருத்துகள்

  1. பெயரில்லாமார்ச் 21, 2009

    hmmm :)
    nalla observation. as u said, we do this by instinct. and ne ida inga sonadukaparam dan i realized dat all of us do it.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..