என் நகல்


( ஒரு மழை நாள் மாலையில்
கடவுள்
என் கதவு தட்டி
காபி காரமெல்லாம் தின்றுவிட்டு
புதிதாய்ப் பிறப்பதற்கு
உமக்கு வாய்ப்பளித்தோம்
எப்படி வசதியென்று
எழுதிக் கொடும் என்றார் .
அவரிடம் பூர்த்தி செய்து கொடுத்த
விண்ணப்பத்தின் நகல் இதோ )

மழலை :-

குட்டியாக இருக்கையில்
கழுதை கூடக் கவிதைதான் !
பிறந்திடுகிறேன்
போதும் எனக்கு

வீட்டார் :-

கதை சொல்லித்
தூங்க வைக்கும்
அப்பா
நான் சொல்லிக்
கதை கேட்கும்
அம்மா
நான்கு வயது வித்தியாசத்தில்
ஒரு தங்கை


பிள்ளைப் பிராயம் :-

1. சின்னதாய்த் தப்புப் பண்ணி
அப்பாவிடம் அடி வாங்கி
தற்காலிகத் தஞ்சத்திற்கு
சேலையைத் தேடி ஓடி
தனியாகப் பிறகு
அம்மாவிடம் ஏச்சு வாங்க வேண்டும் .
2. வெளியிடம்
வீதிகளுக்குச் சென்றால்
தங்கையின் கைபிடித்து
உலகம் சொல்லித் தர வேண்டும்
3. மேகங்களுக்குச் சளியென்று
விசாரிக்கப் போய் நனைந்து
ஜன்னி வந்து பிழைக்க வேண்டும்

வாலிபம் :-

1. பாதைகள்
ஒவ்வொன்றாய்க் கொண்டாலும்
பார்வை
ஒன்றே கொண்ட
தோழர்கள் தோள் வேண்டும்
2. வாழும் சமூகம்
வாலிபரை நம்ப வேண்டும்
3. தேர்ந்திட்ட பாதையில்
பல தூரம் பயணித்தாலும்
அடுத்த மைலை
எட்டிப்பார்க்க ஆவல் வேண்டும்
4. திரும்பிப் பார்க்கச் சொல்லும்
திவ்விய மங்கையர்
தினம் ஒருமுறையாவது
பார்வையில் பட வேண்டும்
முடிந்தால் அவ்ர்கள்
பார்வையும் பட வேண்டும்


காதல் :-

குறைந்த பட்சம்
மூன்றாவது வேண்டும்
கண் பார்த்துச் சொல்லிட
கவிதைகள் வேண்டும்
கண் மூடிச் சிரித்திட
கனவுகள் வேண்டும்
கைகோத்து நடந்திட
கடற்கரை வேண்டும்
பல்சரில் கூட்டிச் செல்ல
பெட்ரோலுக்குக் காசு வேண்டும்
உள்துறை அமைச்சகத்தில்
தங்கையின் துணை வேண்டும்

பெண்வாசம் :-

தோழியாய் ஒரு தாயும்
தாயாய் ஒரு தோழியும்
குழந்தையாய் ஒரு காதலியும்
அவள் ஜாடையில் ஒரு
பெண் குழந்தையும்
பெற்றுவிட்டால் வாழ்வினில்
பெண்சொந்தம்
பரிபூரணம்

குடும்பம் :-

குழந்தையில் நான்
கொண்ட குடும்பம்
என் குழந்தைகளும் அடையட்டும்
என் தந்தை போலவே
ஒரு 'நான்' வேண்டும்
( பி.கு ) குழந்தைகளுக்குச் சொல்ல
கதைப் பஞ்சம் வரவே கூடாது

மரணம் :-
உம் விருப்பம் !

கருத்துகள்

  1. this poem disclosed all your desires in your mind..
    ...............piditha varigal.................
    "nangu vayadhu vithyasathil oru thangai vendum...
    veliyidam veedhigalukuch chendral thangaiyin kai pidithu ulagam sollithara vendum..."

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 18, 2009

    one of my favourite kavidais by u. think u had already mailed me this. everytime i read this one, i feel that whoever is going to marry you is a v.lucky person :)

    மேகங்களுக்குச் சளியென்று
    விசாரிக்கப் போய் நனைந்து
    ஜன்னி வந்து பிழைக்க வேண்டும்
    v. nice lines.

    பதிலளிநீக்கு
  3. dat penvasam was awesome anna.........
    1 copy evlonu sonna vangikka vasathiya irukkum.... unga nagal....

    பதிலளிநீக்கு
  4. enakoru doubt...vaalibathula 4th point la edho sootchamam irukra madiri theriyudhae..:)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாஜனவரி 05, 2011

    பிள்ளைப் பிராயம் padithapin meendum kuzhanthaiyaakivadalaama endru thondrukirathu...குடும்பம் oru nalla palkalaikazhagamo ena aacharyapadavaikirathu..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..