கொஞ்சம் குட்டி விஷயங்கள் !!

மழை




அவசர அவசரமாய்
நனைந்தோடி வந்து
தலை உதறி நிமிர்ந்ததும்
கண் சிமிட்டி மறைந்தது
எனக்கெனப் பெய்த மழை !










வாலிபம் (அ) தேர்வறை


விடைகளைக் கையில் வைத்துக் கொண்டு
வினாக்களைத் தேடிப் பிடிக்கும்
வேடிக்கை விளையாட்டு !




முரண்



வாழ்க்கை
சின்னச் சின்ன முரண்பாடுகளைக்
கவிதையாக்குகிறது
பெரிய முரன்பாடுகளைக்
கலாச்சாரம் ஆக்கி விடுகிறது !





திசை


என்றாவது ஒரு நாள்
திசை மாறிப் போனவன்தான்
உலகை முழுதுமறிகிறான் !




மெய்


உறங்காமலும்
விழிக்காமலும் இருந்திடும்
பொழுதுகளில்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது !

கருத்துகள்

  1. பெயரில்லாமார்ச் 14, 2009

    i really loved muran and thisai. thinking along with your lines, cultures elame muranpaadugal thaan. that too as time goes on, what was considered right becomes wrong and vice versa. namma Paulo coelho kooda The Zahir la idu dan solraru :)

    cross, which was once considered as the worst form of torture is now worshipped by millions of christians all over the world. cultural paradox :)

    பதிலளிநீக்கு
  2. nan innum muranbadugalai rasikka katrukkolavillai...
    athai kavithaigalai matrum kalam kai koodathathal...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜனவரி 05, 2011

    Ennai kavarndhavai ivai.
    திசை
    என்றாவது ஒரு நாள்
    திசை மாறிப் போனவன்தான்
    உலகை முழுதுமறிகிறான் !

    மெய்
    உறங்காமலும்
    விழிக்காமலும் இருந்திடும்
    பொழுதுகளில்
    மெய் தரிசனம்
    சில மின்னல் கீற்றுகளாய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..