காதலடைத்த குடுவை


காதல்
மதுவைப் போல
மூடி வைக்க மூடி வைக்கத்தான்
சுவை கூடும்.
என் காதலை
ஒரு குடுவையில் அடைத்து
இறுக மூடி
உன்னிடம் கொடுத்துவிட்டேன்.
நீ
எத்தனை நாள்
கழித்துத் திறக்கிறாயோ
அத்தனை ருசிக்குமடி !

-  மதி

(கவிதாட்சரம் 5 நாட்களில் முற்றும்)

கருத்துகள்

  1. பெயரில்லாஜனவரி 21, 2011

    Kavithaiyum rusikathaan seikirathu!

    Aanaal thangalathu kaadhal oru velai kai koodi irunthirundhal ivalavu tholaivu thangalin payanam kavidhayilum, ezhuthilum thodarnthirukumaa?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஜனவரி 21, 2011

    Thangalukku yeliya nadaiyai kaatilum tamizh nadai miga porunthi varugirathu endru naan karuthikiren!

    Thangalin kavithaikalai rasikum or aarvalaraaga solkiren!

    பதிலளிநீக்கு
  3. @ dineshkumar நன்றி
    @ anonymous நன்றி. என் எழுத்துக்களைக் கூர்ந்து கவனிக்கிறீர்கள். தமிழ் நடை நன்றாய்ச் செய்திருப்பதாய்த் தாங்கள் சொல்வது ரொம்ப மகிழ்ச்சி... எழுத்தில் எனக்கிது நடை பழகி வளரும் பிராயம்தான். அத்தனை நடைகளையும் பழகிக் கொள்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜனவரி 26, 2011

    Aanaal thangalathu kaadhal oru velai kai koodi irunthirundhal ivalavu tholaivu thangalin payanam kavidhayilum, ezhuthilum thodarnthirukumaa?

    Intha kelviku vidai?vidai illaya?allathu vidai theda virupam illaya?

    பதிலளிநீக்கு
  5. ஒரு வகையில் இந்தக் காதல் என்னை நல்ல படைப்புகள் செய்ய வைத்தது உண்மையே.. ஆனால் நான் காதலிப்பதற்கு முன்னேயே எழுதத் தொடங்கியவன். காதலால் எழுதத் தொடங்கியது காதலை மட்டுமே.. இந்தக் காதல் எப்படி அமைந்திருப்பினும் என் எழுத்து அதற்கேற்றாற்போல் வளைந்து கொடுத்து வளர்ந்தே இருக்கும் என்று தோன்றுகிறது :-) ஆனாலும் எத்தனையோ புரிதல்களைத் தந்து போனதற்காக இப்போது இந்த அனுபவத்தின் மேல் ஒரு இனிய அபிப்பிராயமே மிஞ்சியிருக்கிறது. காலம் இந்தக் காயங்களை எல்லாம் சுலபமாக ஆற்றிவிடுமல்லவா :-)

    பதிலளிநீக்கு
  6. கருந்திராட்சையை கசக்கி
    சாறு எடுத்து புட்டியில்
    அடைத்து வைத்த ஒயின்
    காலம் கடந்து எடுத்து
    பருகினாலே சுவை அதிகம் .

    காதல் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..