வர்ணங்கள்


அந்திமம் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பையும் பொன்னையும் குழைத்துக் குழைத்து வானின் வண்ண விகிதங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அன்றைய சூரியனின் கடைசிக் கதிர்களை தூரத்து மலை முகடுகள் பிரதிபலிக்க , வரவிருக்கும் நிலவின் தண்மைக்கு மேகங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காட்சியில் ஒரு ஓவியன் ஒரு கவிதையிடம் ஒரு கனவை விவரிக்க நேர்ந்தால் ................. ! ஓவியன் - சிவா . கவிதை - அவன் காதலி கவிதா ( என்ன பொருத்தமான பெயர் ) . கனவு - அதுதான் இந்தக் கதையே !

மொட்டை மாடியின் ரம்மியமான பின்னணியில் கண்களில் எதிர்பார்ப்பும் புன்னகையுமாக கவிதா உட்கார்ந்திருக்க , சிவா ஒரு பையிலிருந்து ஏழெட்டு புகைப்படங்களை எடுத்து அவள் முன் அடுக்குகிறான். தன் கனவை விவரிக்கப் போகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறான். அவனுடைய கனவுகள் சாதாரணமானவை அல்ல என்பதை அவள் நன்றாக அறிவாள்.

அவன் காட்டிய அத்தனையும் ஒரு பூங்காவின் படங்கள். நிறைய மரங்கள், மலர்கள், புல்வெளி, அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், ... ஒவ்வொரு படமும் ஒரு பொழுதில் எடுத்தது. விடியற்காலை முதல் நள்ளிரவு வரை. வெவ்வேறு நேரங்களில் ஒரே இடம் . சிவா அவளிடம் சொல்லத் தொடங்கினான் ....

" இந்தப் படமெல்லாம் எப்படியிருக்கு கவி ?"

"ம் நல்லாயிருக்கு . ஆனா நீ குடுத்த பில்டப்புக்கு எந்த சம்பந்தமும் தெரியலையே"
" பொறு கவி ! நான் சொன்னேன்ல என்னுடைய முதல் Gallery Expo - அதுக்காக ஒரு signature piece தயாரிச்சுட்டிருக்கேன். அறிமுகம் ஆகும்போதே ஒரு தனித்துவமான படைப்பைக் காட்டணும் இல்லையா ......... அதுக்காகத்தான் இது . "

"இது சரி ! ஆனா தனித்துவம் எங்கேர்ந்து கொண்டு வரப்போறே "

அவள் கேட்டதும் அந்தப் படங்களை வைத்துத் தான் படைக்கவிருக்கும் வண்ணக் கவிதையின் கருவை அவளிடம் சொன்னான் .

" இதுல கவனிச்சியா , ஒரே இடத்தை வெவ்வேறு நேரத்துல எடுத்திருக்கேன். இதுதான் அடிப்படை . ஒரே கேன்வாஸ்ல வெவ்வேறு லைட் ஷேடுகளை எடுத்துட்டு வரணும். ஒளியோட ஒரு நாள் பயணத்தைப் படமாக்கலாம்னு ஒரு சின்னப் பொறி. ஊதிப் பெருசாக்கிட்டிருக்கேன். போன ஒரு வாரமா பார்க்லயே தவமிருந்து எனக்கு வேணுங்கிற shade வரும்போது அதை அப்படியே freeze பண்ணி வைச்சதுதான் இதெல்லாம். "

"Interesting ! அப்பாகிட்ட சொன்னியா ?"
"தோ இன்னிக்கு சொல்லப்போறேன் . அவரே ஒரு சாதிச்சுக் காட்டின ஓவியர். நான் எடுத்துட்டிருக்கிற சவால் என்னன்னு புரிஞ்சுப்பாரு. ஆனா முதல்ல உங்கிட்டதான் சொல்லணும்னு தோணிச்சு "

" இப்படிலாம் சொன்னா அப்படியே உருகிடுவேன்னு நெனச்சுக்காதே சிவா . சொல்லப் போனா எனக்கு உன் மேல ஒரு சின்னக் கோவம் இருக்கு "

" அடிப் பாவி ! இது வேறயா ...... என்ன கோவம் உங்களுக்கு என் மேல "

" நானும், ஒரு ஓவியனைக் காதலிக்கிறோமே ....... அவனுடைய Expoல நம்மயும் வரைஞ்சு வைப்பான். மாடலா நிக்கணும். அவனோட கேன்வாஸ்ல நம்ம வரணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா ...உனக்கு ஏதாவது புரியுதா ? நானே வாயை விட்டுக் கேட்க வேண்டியிருக்கு "

" ஓ ! என்னே ஒரு ஆசை அருமைக் காதலியே ! நான் கூட யோசிச்சேன் . அப்புறம்தான் இது நம்மளோட அரங்கேற்றம் மாதிரி. ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஏதாவது ஏடாகூடமான முகத்தை வரைஞ்சு திருஷ்டிப்படம் மாதிரி ஆயிடக்கூடாதுன்னு விட்டுட்டேன். சொல்ல வேணாம்னு பாத்தேன். வாயை விட்டுக் கேட்டுட்டே .............."

அதன் பிறகு அவள் அவனை அடிக்க , அவன் அவளை அணைக்க , கனவுக் காட்சி டூயட் காட்சியாக மாறிப் போனது. சிவா அன்றிரவு வீட்டில் அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னான் .

'ஒளியின் ஒரு நாள்'

" பேரு நல்லாருக்கு தம்பி , நல்லா யோசிச்சிருக்கே . நெறய home-work பண்ணு. நல்லா வரும். நல்லா வருவே "

அவ்வளவு போதும். அப்பாவுக்குப் பிடித்திருக்கிறது. நிச்சயமாக ஒரு கனவுப் படைப்பை நனவாக்க முடியும். படைப்பில் இருக்கிற சந்தோஷம் வேறு எதில் வரும் ?

.....................................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


மதி

கருத்துகள்

  1. hey... superb... exhilarating words... nice picturisation of the natural scenes...

    பதிலளிநீக்கு
  2. May we know the Kavitha behind this creator...Siva can you please let the secret out

    பதிலளிநீக்கு
  3. raja ! anda kavitha k...a... varaikum develop aachu. adoda stop agiduchu ... what to do :-)!

    பதிலளிநீக்கு
  4. //ஒவ்வொரு இலையும் தன்னில் ஓடவிட்டுச் சிந்தும் மழைத்துளி நிறமற்ற ஓவியமாகத் தெரிந்தது.

    எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.. அருமையா இருந்துச்சு மதி..

    பதிலளிநீக்கு
  5. @ பிரேம்நாத் .. நன்றி ; இது நான் மிகவும் ரசித்து மனதிற்குள் உருவகித்து உருவகித்து வடித்த ஒரு கதை .. நான் கண்ட அந்த ஓவியத்தின் காட்சி உங்கள் கண்களுக்கும் தெரிந்திருந்தால் ரொம்ப சந்தோஷம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..