வயிற்றுக்கு உணவில்லாத போழ்து ......

வயிற்றுக்கு வக்கற்ற 
ஒரு மாலைப் பொழுதில்
கவிஞர்கள் இருவர்
 கடை வீதியில் உலாவினர் . 
ஒரு சின்ன விவாதம் .

பிரபஞ்சத்தின் மென்மைகளில்
மேன்மை எது ?
தாயின் ஸ்பரிசமா ?
இயற்கையின் தொடுதலா ?

ஒருவன் சொன்னான்
காணும் இயற்கை 
ஆக்கும் அழிக்கும்
அன்னையவள் அறிந்ததெலாம்
அன்பன்றி வேறில்லை 
என்று .

அடுத்தவன்
பிரபஞ்சப் பெருவெளியில்
படைக்கப்பட்ட அனைத்திற்கும்
அம்மா ஒருத்திதானே
இயற்கையும் 
தாய்தானே 
என்றான் . 

இவனோ
பெற்ற பிள்ளை
பிஞ்சுப் பாதம் தடவி
மூச்சோடு நுகர்ந்து
முகம் காட்டிச் சிரிக்கும்
தாயின் அன்பே
தனியான மென்மை
என்றான் . 

அதற்கு அவன்
பெய்து சென்ற பெருமழை
விட்டுச் செல்லும் ஒருதுளி
இலையோடு கூடி
இடையிடை ஓடி
காதோடு சொல்லும்
கடவுளின் உண்மை
என்றான் . 

முடிவான மென்மை மட்டும்
மட்டுப்படவேயில்லை .
கவிஞன் பேச்சுக்குக்
கடிவாளமேது ?

ரோட்டோரம் 
இட்லி விற்கும் கிழவி
அவர்களிருவரையும் 
கூப்பிட்டு விசாரித்து
இரண்டு இட்லிகளும்
தேங்காய் சட்னியும்
இலையில் வைத்துக் கொடுத்தாள் . 

தெளிவு பெற்ற இருவரும்
மென்மைகளில் மேலானது
இரண்டு மாவு உருண்டைகளே
என்று கை நனைத்தனர் .



கருத்துகள்

  1. KADAISI PATHTHIYIL MENMAIHALIL MELANADHU THAAI IYARKAI IRANDUM DHAN ENBATHU PURIGIRADHU... MAAVU URANDAIGALAI ALITHADHAU ORU THAAI... AVVIRU URANDAIGAL URUVAGA KARANAMAI IRUNDHADHU IYARKAI...

    பதிலளிநீக்கு
  2. guess what ... even i ve not thought of such a meaning for the last few lines . but it so happens that when left to the reader , the spectrum expands into several horizons untouched before !

    பதிலளிநீக்கு
  3. an articulate ending...but i feel that u could have expanded a bit more on the traits of nature's motherliness.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..