நரபிரம்மம்



இடம் : சிசுப் பட்டறை , பிரம்மலோகம்
நேரம் : 23-08-1994   காலை 09:28


காணுமிடமெங்கும் தகதகவென்று கனன்று கொண்டிருக்கும் ஜோதி . மையமாக ஒரு சிறு பலகையின் மேல் ஆழ்ந்த யோசனையில் பிரம்மன் வீற்றிருக்கிறான் . எண்ணிக்கையிலடங்கா வருடங்கள் . ஒரே வேலை . ஜீவ மூட்டைகளைப் படைத்துப் படைத்துப் பையிலடைத்து அனுப்பும் வேலை. அவ்வப்போது சில சுவாரசியமான படைப்புகள் - அவதாரங்கள் , மேதைகள் , கொடுங்கோலர்கள் , பேரழகிகள் ! மற்றபடி இயந்திரகதி தான் . அதிலும் சமீப காலமாக
பட்டறையில் வேலை நேரம் கூடிக் கொண்டே போகிறது .

கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு உச்சந்தலையைச் சொறிந்து கொண்டே முனகுகிறான் , " இப்படிச் செய்தால் எப்படி ?"

...............................................................................................

இடம் : முத்து லட்சுமி மருத்துவமனை , அம்பாசமுத்திரம்
நேரம் : 17-05-1995   மாலை : 06:32

குறித்த தேதிக்குப் பல நாட்கள் முன்னதாகவே அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட ஆரம்பித்துவிட்டாள் . வீட்டவர்க்கெல்லாம் ஒரே பரபரப்பு . முத்துலட்சுமி அம்மாவுக்கு இது மற்றுமொரு பிரசவ கேஸ் அவ்வளவுதான் .

ஆண் குழந்தை . அவசரக்காரன். அதிலும் தாய் வயிற்றில் கத்தி வைத்தல்தான் வெளி வருவேன் என்றொரு அடம் வேறு . சிசேரியன் . 2.94 கிலோ . இரண்டு நாள் இன்குபேட்டர் வாசம் பரிந்துரைக்கப் பட்டது .

கர்ப்பப்பை வெப்பத்துக்கும் இன்குபேட்டர் வெப்பத்துக்கும் வித்தியாசம் இருந்தது. தீபத்துக்கும் தீக்குச்சிக்கும் உள்ள வித்தியாசம் !
 அவன் அவதரித்து விட்டான் .


.....................................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


மதி

கருத்துகள்

  1. beautiful concept.and worded very poetically. the way you have described the scenes and the settings sounds very good. a lovely one :)

    பதிலளிநீக்கு
  2. How to use the mozhi nu onnu iruku da...atha ne pinni pedal edukara

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜனவரி 06, 2011

    "என் மகன் குருடும் செவிடும் ஊமையுமாய்த்தான் பிறந்திருக்கிறான் . அனாதையாய்ப் பிறக்கவில்லை !"

    Romba Touching ah iruku.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..