எதிர்வினை ஏக்கம் - வெண்பா


விரிந்தமலர் தேன்தாங்கி வண்டேங்கி நிற்கும்
உறவாட தன்னுள்ளில் காதல் வரிந்து
வினைக்கான வோர்நல் லெதிர்வினைப் பார்வைக்காய்க்
காத்தேங்கும் காதலர் போல .

-மதி

பூத்து விரிந்த மலர் தன்னிடம் தேன் குடித்து உறவாட வரும் வண்டிற்காய்க் காத்து ஒரு சின்ன ஏக்கத்துடன் நிற்பது , தன் உள்ளத்தில் காதலை வளர்த்துக் கொண்டு தான் விடும் விழியம்புகளுக்கு எதிர் வினையாக ஒரு நல்ல காதல் பார்வை வாராதா என்று காத்து ஏங்கித் தவிக்கும் காதலரை ஒத்திருக்கிறது என்று பொருள். 


கருத்துகள்

  1. நல்ல கவிதை.. சற்று நீளமான பாடல்களை எழுத முயற்ச்சிக்கலாமே...

    பதிலளிநீக்கு
  2. Nalla muyarchi... Ethugaiyum, 2m adiyil thanich chollum missing... :)

    பதிலளிநீக்கு
  3. @will , thanks .. @udaya , thanks .. will try to write even more correct versions soon :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..